Ad sense

Thursday, July 29, 2010

“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்


தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை
  • மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
  • திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு மருதாணி இடுதல், நலங்கிடல் என்ற பெயரில் சடங்கு செய்தல்.
  • கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
  • மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
  • மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,
  • ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
  • மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
  • மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
  • மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
  • மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
  • நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
  • மேடை அலங்காரம்,  மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
  • சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
  • திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
  • மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும். நன்றி : இதுதான் இஸ்லாம்
இஸ்லாத்திற்கு மாற்றமாக இது மாதிரியான திருமணங்களை புறக்கணித்து சமுதயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர். (அல்குர் ஆன் : அல்மாயிதா 5:56)


மணமக்களை வாழ்த்துதல்

நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் பது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
 
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்"

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் ப
ழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்) என்று கூறுவார்கள்.
அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

No comments: